கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சுதீப், தமிழில் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் விஜய் நடித்த 'புலி' படத்திலும் வில்லனாக நடித்தார். பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'முடிஞ்சா இவன புடி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படம் வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
சுதீப் நடித்து கன்னடத்தில் தயாரான 'விக்ராந்த் ரோணா' கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ள படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது பற்றிய அறிமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டனர். சுதீப்பின் 46வது படமாக இது உருவாக உள்ளது. விரைவில் படத்தின் டீசருடன் வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படமும் ஒரு பான் இந்தியா படமாகத்தான் வெளிவரும் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படத்திற்குப் பிறகு தாணு தயாரிக்கும் படம் இது. அவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இன்னமும் தெரியாத நிலையில் உள்ளது. வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அது.