'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தெலுங்குத் திரையுலகத்தின் 'என்றும் மார்க்கண்டேயன்' என்றழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அவரால் தற்போது பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அவரது காலத்து ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா கூட இப்போதும் 100 கோடி படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'த கோஸ்ட்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது இளைய மகன் அகில் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது மூத்த மகன் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'கஸ்டடி' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.
கதைத் தேர்வுகளில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடும் போட்டி நிலவி வரும் இந்தக் காலத்தில் கதையும், கதாபாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களது கடைசி படங்களின் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, தங்களது அடுத்த படக் கதைத் தேர்வுகளில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பது உறுதி. சினிமாவில் வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீள்வதுதான் முக்கியம்.




