ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தெலுங்குத் திரையுலகத்தின் 'என்றும் மார்க்கண்டேயன்' என்றழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அவரால் தற்போது பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அவரது காலத்து ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா கூட இப்போதும் 100 கோடி படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'த கோஸ்ட்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது இளைய மகன் அகில் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது மூத்த மகன் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'கஸ்டடி' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.
கதைத் தேர்வுகளில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடும் போட்டி நிலவி வரும் இந்தக் காலத்தில் கதையும், கதாபாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களது கடைசி படங்களின் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, தங்களது அடுத்த படக் கதைத் தேர்வுகளில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பது உறுதி. சினிமாவில் வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீள்வதுதான் முக்கியம்.