சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் வரை சலார் படம் குறித்த இப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார் பிரசாந்த் நீல்.
ஆனால் இதற்கு முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பாதிக்க வேண்டாம் என சவால் குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார் பிரசாந்த் நீல். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை விட சலார் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.
இதனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட தற்காலிகமாக சோசியல் மீடியாவை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்து வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.