இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் வரை சலார் படம் குறித்த இப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார் பிரசாந்த் நீல்.
ஆனால் இதற்கு முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பாதிக்க வேண்டாம் என சவால் குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார் பிரசாந்த் நீல். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை விட சலார் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.
இதனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட தற்காலிகமாக சோசியல் மீடியாவை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்து வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




