ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருந்தார் இயக்குனர் நிசாம் பஷீர். இந்த படத்தை தொடர்ந்து அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிசாம் பஷீர். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன சுராஜ் வெஞ்சார மூடு நடிக்க உள்ளார். ரோசாக் படத்திற்கு கதை எழுதிய சமீர் அப்துல் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த புதிய படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.