2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருந்தார் இயக்குனர் நிசாம் பஷீர். இந்த படத்தை தொடர்ந்து அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிசாம் பஷீர். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன சுராஜ் வெஞ்சார மூடு நடிக்க உள்ளார். ரோசாக் படத்திற்கு கதை எழுதிய சமீர் அப்துல் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த புதிய படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.