தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு |
கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருந்தார் இயக்குனர் நிசாம் பஷீர். இந்த படத்தை தொடர்ந்து அவர் மோகன்லால் படத்தை இயக்குவார் என கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிசாம் பஷீர். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன சுராஜ் வெஞ்சார மூடு நடிக்க உள்ளார். ரோசாக் படத்திற்கு கதை எழுதிய சமீர் அப்துல் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த புதிய படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.