அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அதன் பிறகு அவர் நடித்த நண்பன், மெர்சல், வாரிசு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதில், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திலும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜய்யின் 68வது படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க அவரிடத்தில் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.