இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒரு விழா கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 'தேவதாஸ்' படத்திற்கான திரையிடலில் முதன் முதலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து 'ரெட் கார்ப்பெட்'டில் அசத்தியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக லகானி வடிவமைத்துள்ள அந்த ஆடை அலுமினியம் மற்றும் கிரிஸ்டல் கலந்து உருவாக்கப்பட்ட ஆடை. சோபி கோச்சர் என்ற நிறுவனத்தின் வெளியீடாக கேன்ஸ் விழாவில் அந்த சில்வர் நிற ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலை முழுவதுமாக மறைத்திருக்கும் அந்த ஆடையில் ஐஸ்வர்யா ராயின் முகத் தோற்றமும், அவரது கண்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளாக நிறைந்துள்ளது.