திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் | சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய தமன் குமார் | தலை பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன் | கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல் |
உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒரு விழா கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 'தேவதாஸ்' படத்திற்கான திரையிடலில் முதன் முதலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து 'ரெட் கார்ப்பெட்'டில் அசத்தியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக லகானி வடிவமைத்துள்ள அந்த ஆடை அலுமினியம் மற்றும் கிரிஸ்டல் கலந்து உருவாக்கப்பட்ட ஆடை. சோபி கோச்சர் என்ற நிறுவனத்தின் வெளியீடாக கேன்ஸ் விழாவில் அந்த சில்வர் நிற ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலை முழுவதுமாக மறைத்திருக்கும் அந்த ஆடையில் ஐஸ்வர்யா ராயின் முகத் தோற்றமும், அவரது கண்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளாக நிறைந்துள்ளது.