‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
100 நாட்கள் என்பதே அரிதாகிப் போன இந்தக் காலத்தில் ஒரு படம் 50 நாளைத் தொடுவதே ஒரு சாதனைதான். தியேட்டர்களில் ஓடாத சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கே 50வது நாள் போஸ்டர்கள் வெளியிடும் இந்தக் காலத்தில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடி 50 நாளைக் கடந்தாலும் அது சிறப்பே.
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
படம் வெளியான போது விமர்சகர்களின் வரவேற்பும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் படத்தின் கதையைப் பற்றியும், கதாபாத்திரங்களைப் பற்றியும் சில சர்ச்சைகள் எழுந்தது.
பின் ஓடிடி தளத்தில் வெளியான பின் குறுகிய காலத்தில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. ஓடிடியில் வெளிவந்த பின்பும் தியேட்டர்களில் ஓடுவதும் பெருமைதான். இந்த வருடத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில காட்சிகளை தற்போது படமாக்கி வருவதாகவும் தகவல்.