மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
காமெடியனாக நடித்து வந்த சூரியை தனது ‛விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன். அதையடுத்து தற்போது ‛விடுதலை-2' படத்திலும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த 20ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாஸிடிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள தியேட்டரில் விடுதலை- 2 படத்தை பார்த்துள்ளார் நடிகர் சூரி.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛விடுதலை படத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். திருச்சி மக்களோடு சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திருச்சி வந்துள்ளேன். இந்த படத்தை அடுத்து ‛மாமன்' என்ற படத்தில் நடிக்கிறேன்'' என்று கூறிய சூரியிடத்தில், விடுதலை மூன்றாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. மூன்றாம் பாகம் வருமா? வராதா? என்பதை இயக்குனர் வெற்றிமாறன்தான் முடிவெடுப்பார்'' என்று கூறியிருக்கிறார் சூரி.