'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
காமெடியனாக நடித்து வந்த சூரியை தனது ‛விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன். அதையடுத்து தற்போது ‛விடுதலை-2' படத்திலும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த 20ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாஸிடிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள தியேட்டரில் விடுதலை- 2 படத்தை பார்த்துள்ளார் நடிகர் சூரி.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛விடுதலை படத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். திருச்சி மக்களோடு சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திருச்சி வந்துள்ளேன். இந்த படத்தை அடுத்து ‛மாமன்' என்ற படத்தில் நடிக்கிறேன்'' என்று கூறிய சூரியிடத்தில், விடுதலை மூன்றாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. மூன்றாம் பாகம் வருமா? வராதா? என்பதை இயக்குனர் வெற்றிமாறன்தான் முடிவெடுப்பார்'' என்று கூறியிருக்கிறார் சூரி.