ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யா இந்த படத்தின் மூலம் தமிழிலும் கால் பதிக்க இருக்கிறார். கூடவே நடிகை கீர்த்தி ஷெட்டியும் இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை கஸ்டடி படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, "கஸ்டடி திரைப்படம் நான் இதுவரை செய்திராத புதிய ஜானரில் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த படத்தில் வில்லன் சாகக்கூடாது என்பதுதான் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். 48 மணி நேரத்தில் நடக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் ஹீரோவும், வில்லனும் மொத்தமே இரண்டு செட் உடைகள் தான் அணிந்து நடித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. அந்தப் படத்திலும் வில்லன் எஸ்.ஜே சூர்யா படத்தின் நாயகன் சிம்புவை சாக விடாமல் பார்த்துக் கொள்வது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்காக இருந்தது என்பது ஆச்சரிய ஒற்றுமை.