கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யா இந்த படத்தின் மூலம் தமிழிலும் கால் பதிக்க இருக்கிறார். கூடவே நடிகை கீர்த்தி ஷெட்டியும் இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை கஸ்டடி படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, "கஸ்டடி திரைப்படம் நான் இதுவரை செய்திராத புதிய ஜானரில் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த படத்தில் வில்லன் சாகக்கூடாது என்பதுதான் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். 48 மணி நேரத்தில் நடக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் ஹீரோவும், வில்லனும் மொத்தமே இரண்டு செட் உடைகள் தான் அணிந்து நடித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. அந்தப் படத்திலும் வில்லன் எஸ்.ஜே சூர்யா படத்தின் நாயகன் சிம்புவை சாக விடாமல் பார்த்துக் கொள்வது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்காக இருந்தது என்பது ஆச்சரிய ஒற்றுமை.