சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு ஆச்சார்யா, காட்பாதர் என இரண்டு படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இதில் ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. காட்பாதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதேசமயம் இந்தாண்டு துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் போலோ சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
வால்டர் வீரய்யா படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜாவும் இணைந்து நடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதை கவனத்தில் கொண்ட சிரஞ்சீவி அடுத்ததாக தன்னை தேடி வந்து சோக்காடே சின்னி நாயனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா குரசாலா சொன்ன கதையில் இன்னொரு இளம் நடிகருக்கான கதாபாத்திரமும் இருந்ததால் ரொம்பவே உற்சாகமாகி விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் சித்து ஜொன்னலகடா நடிக்க உள்ளாராம். தனது அடுத்தடுத்த படங்களில் இப்படி இன்னொரு இளம் நடிகரும் நடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் சிரஞ்சீவி.