பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
சினிமா பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போதும், வெளியூர் பயணங்களை மேற்கொள்ள விமான நிலையம் செல்லும்போதும், ரசிகர்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் அனுமதியை கேட்காமலேயே அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்று நடிகர் சிவகுமாரின் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயன்றபோது அவரது செல்போனை சிவகுமார் தட்டிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல நடிகர் மம்முட்டி ஒரு முறை பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்குள் நுழைந்தபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக்கொண்டு, தொழுகை முடிந்த பின்னர் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினார். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை பறித்து தூக்கி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது லேட்டஸ்டாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நடிகர் ஷாருக்கானுடன் அவரது அனுமதி இன்றி ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயற்சிப்பதும் நடிகர் ஷாருக்கான் போகிற போக்கில் அந்த இளைஞரின் கையை தட்டி விடும் விதமாக அந்த பக்கம் தள்ளி விடுகின்ற வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல சிலர் ஷாருக்கானை விமர்சித்தாலும் பெரும்பாலாக நெட்டிசன்கள் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் அவர்களது அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க முயற்சிப்பது தவறான விஷயம் என்று ஷாருக்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.