ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படம் வெளியான இரண்டு நாளில் உலக அளவில் 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மேலும் 50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூலும் 50 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. ஆக, நான்கே நாட்களில் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தின் மொத்த வசூல் 500 கோடியைக் கடந்தது. இரண்டாம் பாகத்தின் வசூல் நான்கு நாட்களில் 200 கோடியைக் கடந்தாலும் மேலும் 300 கோடி வசூலைப் பெற்று முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படியாக இப்படம் இருக்கிறது. முதல் பாகத்தைப் பார்க்கத் தவறியவர்களும் இரண்டாம் பாகத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் முதல் பாகத்தின் கதைச் சுருக்கத்தை கமல்ஹாசன் குரலில் இரண்டாம் பாகத்தில் எளிதாகப் புரிய வைக்கிறார்கள்.
இப்படத்திற்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தியேட்டர்கள் பக்கம் வருவதால் முதல் பாகத்தைப் போலவே வசூல் சாதனை புரியும் என்றே நம்புகிறார்கள்.