பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படம் வெளியான இரண்டு நாளில் உலக அளவில் 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மேலும் 50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூலும் 50 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. ஆக, நான்கே நாட்களில் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தின் மொத்த வசூல் 500 கோடியைக் கடந்தது. இரண்டாம் பாகத்தின் வசூல் நான்கு நாட்களில் 200 கோடியைக் கடந்தாலும் மேலும் 300 கோடி வசூலைப் பெற்று முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படியாக இப்படம் இருக்கிறது. முதல் பாகத்தைப் பார்க்கத் தவறியவர்களும் இரண்டாம் பாகத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் முதல் பாகத்தின் கதைச் சுருக்கத்தை கமல்ஹாசன் குரலில் இரண்டாம் பாகத்தில் எளிதாகப் புரிய வைக்கிறார்கள்.
இப்படத்திற்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தியேட்டர்கள் பக்கம் வருவதால் முதல் பாகத்தைப் போலவே வசூல் சாதனை புரியும் என்றே நம்புகிறார்கள்.




