ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த படக்குழு நேற்று சென்னையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
இந்த நிறைவு நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது: கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து விட்டு விடைபெறுவது போன்று உள்ளது. இந்த படம் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மணிரத்னம் இயக்கி உள்ளார். படம் வெற்றியோ தோல்வியோ இது தமிழ் சினிமாவின் முக்கிய படம் என்றார் ஏ.ஆர்.ரகுமான். ஒரு வெற்றி பெற்ற கதையில், ஒரு வெற்றி பெற்ற படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்றோம். சிலர் 'பேஷன் ஷோ' நடத்துகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நாங்கள் தமிழ்நாட்டை இந்திய நகரங்களில் பிரதிநிதித்துவப்படுத்தினோம்.
மணிரத்னத்தின் கனவுப் படம் இது. ஆனால் கேட்டால் அவர் இது கனவுப் படம் என்பதையே சொல்லமாட்டார். ராஜ ராஜ சோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பாத்திருக்கிறேன். காலத்திற்கும் நிற்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்தப் படத்தை அவர் ரசித்து இயக்கினார். இந்த படத்தில் நடித்த நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம். என்றார்.
த்ரிஷா பேசியதாவது: சென்னையில் தொடங்கி சென்னையில் புரமோஷனை முடிக்கிறோம். படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வேலை பார்த்ததை பெருமையாக கருதுகிறேன். மணிரத்னத்தின் 'குந்தவை' நான் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. எனக்கு சிறந்த நண்பர்களாக பொன்னியின் செல்வன் படக்குழு கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் வேலை பார்த்தது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத இனியமையான அனுபவமாக இருக்கும். இந்தக் குழுவுடன் பயணிக்கும்போது ஒரு பெண்ணாக மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். என்றார்.