ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி வசூலை குவித்தது. இதன் இரண்டாம் பாகம் இன்று ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் நடைபெறாதது ஏமாற்றமே. 9 மணிக்கு மேல் தான் பெரும்பாலான தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.
கடந்த 10 நாட்களாக படக்குழுவினர் சோழர்கள் பயணம் என்ற பெயரில் சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, டில்லி என பல ஊர்களுக்கு சென்று புரொமோஷனில் ஈடுபட்டனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதையில் அதிக திருப்பங்கள் இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்றோடு பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிவடைகிறது. வார இறுதிநாள் வரை பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்றுள்ளது. திங்கள்கிழமைம் மே 1 விடுமுறை தினம் என்பதால் இந்த நான்கு நாட்களிலேயே படம் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தைப் பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் தவறாமல் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. முதல் பாகம் 500 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் இரண்டாம் பாகமும் அதே 500 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது.