இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.
இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.
இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.