என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
குஷ்பு, நயன்தாரா உள்பட பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே ஒரு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் சமந்தாவின் சிலையை வைத்திருக்கிறார். இந்த கோவில் ஏப்ரல் 28ம் தேதியான நாளை திறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தியை அந்த ரசிகர் வெளியிட்டு இருக்கிறார். சமந்தாவுக்காக அவர் உருவாக்கி உள்ள அந்த சிலையானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோயிலை தான் கட்டி உள்ளதாகவும், இதுவரை தான் சமந்தாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.