ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

குஷ்பு, நயன்தாரா உள்பட பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே ஒரு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் சமந்தாவின் சிலையை வைத்திருக்கிறார். இந்த கோவில் ஏப்ரல் 28ம் தேதியான நாளை திறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தியை அந்த ரசிகர் வெளியிட்டு இருக்கிறார். சமந்தாவுக்காக அவர் உருவாக்கி உள்ள அந்த சிலையானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோயிலை தான் கட்டி உள்ளதாகவும், இதுவரை தான் சமந்தாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.




