‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' வரலாற்று படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் புரமோசனுக்காக படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய மணிரத்னம் 'பாகுபலி கொடுத்த தைரியத்தால் பொன்னியின் செல்வன் உருவானது' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியும், திட்டமிடலும் என்னிடம் இல்லை. காரணம் படத்திற்கு ஆகும் பட்ஜெட். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
இந்த நிலையில் சரித்திர பின்னணியில் 'பாகுபலி' படத்தை ராஜமவுலி எடுத்தார். அந்தபடம் ஏற்படுத்திய தாக்கம் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. பொன்னியின் செல்வனை உருவாக்கும் உந்து சக்தியை கொடுத்தது. நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலியை இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத் துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன். என்றார்.