கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சென்னையை அடுத்த பையனூரில் அரசின் சார்பில் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஸ்டுடியோக்கள், டப்பிங், ரிக்கார்டிங் தியேட்டர்கள், திரைப்பட அரங்கங்கள், தொழிலாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணைப்பு சாலை அமைக்க திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அரசிடம் 35 லட்சம் கொடுத்தது.
இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பையனூரில் நாம் புதிதாக கட்டி வரும் திரைப்பட அரங்கிற்கு அருகே சாலை அமைக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. சாலை மதிப்பு ஒரு கோடியே ஐந்து லட்சம் அதில் மூன்றில் ஒரு பங்கை நம் சம்மேளனத்தில் மூலம் செலுத்தினால் அந்த சாலைத் திட்டத்திற்கு முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்த முடியும் என்று ஆட்சியாளர் கூறியதை ஏற்று சம்மேளனத்தின் பங்காக 35 லட்ச ரூபாயை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் ராகுல்நாத்திடம் சம்மேளனத் தலைவர் ஆர்கே. செல்வமணி, துணைத் தலைவர் தீனா வழங்கினார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.