ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1, 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படங்களை ஒன்றிணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் நேற்று பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளார்கள்.
படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வந்தாலும் படத்தில் உள்ள ஒரு விஷயம் ரசிகர்களை 'டயர்ட்' ஆக்கிவிடுவதாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர். அது படத்தின் நீளம். 3 மணி நேரம் 30 நிமிடம் ஓடும் படம் ரசிகர்களை மிகவும் சோர்வடைய வைத்துவிடுகிறது என்பது பலரது கமெண்ட் ஆக உள்ளது. மூன்று மணி நேரம் இருந்தால் கூட தெரியாது, ஆனால், இவ்வளவு நேரம் இருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது என்கிறார்கள்.
நேற்றையை முதல் நாள் வசூலாக இப்படம் சுமார் 20 கோடி வரை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




