'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

முன்னணி இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க பி.வி.கே கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது பி.வி.கே நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த வந்த இந்த வழக்கல் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை தொகையில் 20 சதவிகித்தை கோர்ட்டில் கட்ட தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.




