மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ்த் திரையுலகில் எழுத்தாளராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் தூயவன். அவரது மகன் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். தற்போது அவரது மனைவி முஸ்திரி தயாரிக்கும் படம் 'ஜெனி'.
திரைப்படக் கல்லூரியில் படித்த நித்தியானந்தம் இயக்குகிறார். கீதாகரன் ஒளிப்பதிவு செய்கிறார். யதீஷ் இசை அமைக்கிறார். பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த படம். ரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும். இது ஒரு திரைப் படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு. என்றார்.




