'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனம் தயாரித்து இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த 'வீ ரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா' ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது.
தற்போது விஜய் தேவரகொன்டா, சமந்தா நடிக்கும் 'குஷி', அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்து சில பிரம்மாண்டப் படங்களையும் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் அலுவலங்களில், 'புஷ்பா' இயக்குனர் சுகுமார் இல்லத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்கிறது. வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா என சோதனை நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நிய முதலீடு குறித்து அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி வருகிறதாம்.
முறையான விதிகளை கடைபிடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து சுமார் 500 கோடி அளவிற்கு மைத்ரி நிறுவனம் பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேகப்பட்டு சோதனை நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சோதனைகளால் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.