‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனம் தயாரித்து இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த 'வீ ரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா' ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது.
தற்போது விஜய் தேவரகொன்டா, சமந்தா நடிக்கும் 'குஷி', அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்து சில பிரம்மாண்டப் படங்களையும் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் அலுவலங்களில், 'புஷ்பா' இயக்குனர் சுகுமார் இல்லத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்கிறது. வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா என சோதனை நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நிய முதலீடு குறித்து அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி வருகிறதாம்.
முறையான விதிகளை கடைபிடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து சுமார் 500 கோடி அளவிற்கு மைத்ரி நிறுவனம் பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேகப்பட்டு சோதனை நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சோதனைகளால் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.