பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் |

வீரன் பெரியவரா, மன்னன் பெரியவரா என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை ஒரு 'மாவீரனுக்கு' ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மே மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகளில் தாமதமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மே மாதத்தில் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டாராம். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் படத்தை ஜுன் மாதக் கடைசிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.
'மாமன்னன்' வெளியீடு ஜுன் மாதம் தள்ளிப் போனதால், அப்போது வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'மாவீரன்' படத்தை ஜுலை கடைசிக்கு மாற்றியிருக்கிறார்களாம். 'மாவீரன்' படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளி வைப்பு. 'மாமன்னன்' படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் அப்படத்தை வேறு எந்தப் படத்துடனும் போட்டியாக வெளியிட விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.