நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வீரன் பெரியவரா, மன்னன் பெரியவரா என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை ஒரு 'மாவீரனுக்கு' ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மே மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகளில் தாமதமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மே மாதத்தில் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டாராம். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் படத்தை ஜுன் மாதக் கடைசிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.
'மாமன்னன்' வெளியீடு ஜுன் மாதம் தள்ளிப் போனதால், அப்போது வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'மாவீரன்' படத்தை ஜுலை கடைசிக்கு மாற்றியிருக்கிறார்களாம். 'மாவீரன்' படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளி வைப்பு. 'மாமன்னன்' படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் அப்படத்தை வேறு எந்தப் படத்துடனும் போட்டியாக வெளியிட விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.