இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வீரன் பெரியவரா, மன்னன் பெரியவரா என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை ஒரு 'மாவீரனுக்கு' ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மே மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகளில் தாமதமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மே மாதத்தில் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டாராம். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் படத்தை ஜுன் மாதக் கடைசிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.
'மாமன்னன்' வெளியீடு ஜுன் மாதம் தள்ளிப் போனதால், அப்போது வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'மாவீரன்' படத்தை ஜுலை கடைசிக்கு மாற்றியிருக்கிறார்களாம். 'மாவீரன்' படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளி வைப்பு. 'மாமன்னன்' படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் அப்படத்தை வேறு எந்தப் படத்துடனும் போட்டியாக வெளியிட விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.