ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
நடிகை ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி. மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாயகியாக சில படங்களில் நடித்தார். கடைசியாக விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தில் நடித்தார். கடந்த சில வருடங்காக சினிமா வாய்ப்பு எதுவும் இன்றி இருக்கும் ஷாமிலி தற்போது ஓவியராக மாறி இருக்கிறார்.
பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவனிடம் முறைப்படி ஓவியம் கற்ற ஷாமிலி தற்போது ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ள ஷாமிலி, சமீபத்தில் துபாயில் உள்ள 'வேர்ல்ட் ஆர்ட் துபாய்' எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சர்வதேச அளவில் ஓவியராக வலம் வர வேண்டும் என்பதே ஷாமிலியின் லட்சியம்.