திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க விமல் கோபி என்பவரிடம் 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை வங்கயில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்னரும் விமல் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் கோபி செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன் வரவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 அபராதம் விதித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.