2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் மற்றும் ரித்திகா செல்வி ஆகியோர் நடிக்கின்றனர். 'அண்ணா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும், நந்தினி தொடருக்கு பின் நித்யா ராம் மீண்டும் தமிழில் நடிக்க வருவதால் அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங்கானது கடந்த 10ம் தேதி, முருகன் கோயில் ஒன்றின் வாசலில் வைத்து பூஜையுடன் தொடங்கியுள்ளது. மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் ஒன்றாக சேர்ந்து க்ளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளனர். 'அண்ணா' சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.