முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் மற்றும் ரித்திகா செல்வி ஆகியோர் நடிக்கின்றனர். 'அண்ணா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும், நந்தினி தொடருக்கு பின் நித்யா ராம் மீண்டும் தமிழில் நடிக்க வருவதால் அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங்கானது கடந்த 10ம் தேதி, முருகன் கோயில் ஒன்றின் வாசலில் வைத்து பூஜையுடன் தொடங்கியுள்ளது. மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் ஒன்றாக சேர்ந்து க்ளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளனர். 'அண்ணா' சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.