வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா |
சென்னையில் உள்ள கலாச்ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் முன்னாள் மாணவியான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், சோசியல் மீடியாவில் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். அதில், எப்போதுமே ஒரு விஷயத்தை ஒரு பக்கமாக இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. பேராசிரியர்கள் பக்கமும் இருந்து பார்க்க வேண்டும். 80 வருட பாரம்பரியம் உள்ள கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற முறையில் அங்கு எந்த விதமான தவறு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவரை பலரும் வசை பாடினார். சிலர் மிரட்டவும் செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார் அபிராமி.
இந்த நிலையில் அபிராமிக்கு, நடிகை சனம் ஷெட்டி ஒரு எதிர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஆணவம் அறியாமையான பேச்சு பேச விரும்பவில்லை. உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அவர்களுக்கும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. 80 வருடங்களாக நீங்கள் அந்த கல்லூரியில் இருந்தீர்களா? அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் பேராசிரியர்கள் பக்கம் மட்டும் இருக்கிறீர்கள்? விரைவில் உண்மை வெளிவரும். அதுவரை காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார் சனம் செட்டி.
அபிராமி - சனம் ஷெட்டி ஆகிய இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களாகவும் இருந்தவர்கள்.