‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சென்னை, திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய கல்லூரியான கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகள் பலர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி தனது கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியில், 'நானும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி தான். கலாஷேத்ராவின் ஆசிரியர் நிர்மலா என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். ஹரிபத்மனால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர். ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக மாற்றப்படுகிறார்கள். கலாஷேத்ரா கலாசாரத்தின் அடையாளம். அதற்கு அவப்பெயர் வரும் போது அம்மாவை தவறாக பேசுவது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த கருத்தானது சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.