25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவில் 80களில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். 90களின் துவக்கத்திலேயே தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவரை வைத்து சில இளமை ததும்பும் படங்களை எடுத்து அவரையும் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.
சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். “டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ள அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறாராம். இது குறித்து ராதிகா, “வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. நமக்கு நாமே சிறந்த வடிவத்தில் வளர்கிறோம். எஸ்ஏ சந்திரசேகர் சார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' என்ற தொடரை ஆரம்பித்துள்ளோம், அனைவரின் வாழ்த்துகளும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகன் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் 1 வசூல் நடிகராக இருக்க, அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். இத்தொடரில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்வும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.