ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ் சினிமாவில் 80களில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். 90களின் துவக்கத்திலேயே தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவரை வைத்து சில இளமை ததும்பும் படங்களை எடுத்து அவரையும் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.
சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். “டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ள அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறாராம். இது குறித்து ராதிகா, “வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. நமக்கு நாமே சிறந்த வடிவத்தில் வளர்கிறோம். எஸ்ஏ சந்திரசேகர் சார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' என்ற தொடரை ஆரம்பித்துள்ளோம், அனைவரின் வாழ்த்துகளும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகன் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் 1 வசூல் நடிகராக இருக்க, அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். இத்தொடரில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்வும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.




