25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
இந்திய சினிமாவில் மேக்அப் போடாமல் நடிக்கும் ஒரே நடிகை சாய்பல்லவிதான் என்கிறார்கள். அதற்கு காரணம் இயற்கையிலே ரோஸ் நிறத்தில் இருக்கும் அவரது முகத்திற்கு மேக்அப் தேவையில்லை என்பார்கள். ஆரம்பத்தில் அவருக்கு முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன, இதை மறைப்பதற்காக மேக்அப் போட்டபோது அவரது தோற்றமே மாறியது. அதனால் மேக்அப் போட்டு நடிப்பதில்லை என்று சாய்பல்லவி முடிவெடுத்தார். படத்தின் கேரக்டருக்கு ஏற்ப சிகை அலங்காரத்திலும் தோற்றத்திலும் சில மாறுதல்களை மட்டும் செய்து கொள்வார்.
இதுகுறித்து சாய்பல்லவி சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது முதல் படமான 'பிரேமம்' படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.