இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்திய சினிமாவில் மேக்அப் போடாமல் நடிக்கும் ஒரே நடிகை சாய்பல்லவிதான் என்கிறார்கள். அதற்கு காரணம் இயற்கையிலே ரோஸ் நிறத்தில் இருக்கும் அவரது முகத்திற்கு மேக்அப் தேவையில்லை என்பார்கள். ஆரம்பத்தில் அவருக்கு முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன, இதை மறைப்பதற்காக மேக்அப் போட்டபோது அவரது தோற்றமே மாறியது. அதனால் மேக்அப் போட்டு நடிப்பதில்லை என்று சாய்பல்லவி முடிவெடுத்தார். படத்தின் கேரக்டருக்கு ஏற்ப சிகை அலங்காரத்திலும் தோற்றத்திலும் சில மாறுதல்களை மட்டும் செய்து கொள்வார்.
இதுகுறித்து சாய்பல்லவி சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது முதல் படமான 'பிரேமம்' படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.