ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் 'தங்கலான்'. இதில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடந்து வந்தது. கோலார் தங்கச் சுரங்கம் உருவான போது அங்கு தமிழக தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த 'பிகே ரோசி' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும்.
கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். அடுத்த என்ன படம் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கமல் நடிக்கும் படத்திற்கான கதையையும், 'சர்பட்டா பரம்பரை' 2ம் பாகத்திற்கான கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்றார்.