30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'விடுதலை'. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் வியாபார ரீதியாகவும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிகாந்த்திற்கு பிரத்யேகமாகத் திரையிட்டு காட்டப்பட்டது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரிடம் படத்தைப் பார்த்ததும் பாராட்டிப் பேசியுள்ளார். அது மட்டுமல்ல டுவிட்டரிலும் படத்தைப் பற்றி அவருடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பதிவிற்கு நன்றி தெரிவித்து சூரி, “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும், உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி,” என முதலில் ஒரு பதிவிட்டிருந்தார்.
பின் இருபது நிமிட இடைவெளியில் மீண்டும், “என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்..,” ஒரு பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.