இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. மாடலிங்கில் இருந்த லாவண்யா, விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க வந்தார். அந்த தொடருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சீக்கிரமே நிறைவுற்றது. இந்நிலையில், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே, வீஜே சித்ரா, காவ்யா அறிவுமணி என இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால் முல்லை கதாபாத்திரம் லாவண்யாவுக்கு செட்டாகாது என பலரும் நெகட்டிவாக பேசி வந்தனர். ஆனால், புதிய முல்லையாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக செட்டாகி மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், அவர் தற்போது 'ரேசர்' என்கிற புதிய படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் லாவண்யாவின் குடும்பத்தினர் முதலில் லாவண்யாவை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்காக தான் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் குறித்தும் லாவண்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.