12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. மாடலிங்கில் இருந்த லாவண்யா, விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க வந்தார். அந்த தொடருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சீக்கிரமே நிறைவுற்றது. இந்நிலையில், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே, வீஜே சித்ரா, காவ்யா அறிவுமணி என இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால் முல்லை கதாபாத்திரம் லாவண்யாவுக்கு செட்டாகாது என பலரும் நெகட்டிவாக பேசி வந்தனர். ஆனால், புதிய முல்லையாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக செட்டாகி மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், அவர் தற்போது 'ரேசர்' என்கிற புதிய படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் லாவண்யாவின் குடும்பத்தினர் முதலில் லாவண்யாவை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்காக தான் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் குறித்தும் லாவண்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.