தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் 2014ல் திருமணம், அதன்பிறகு கணவருடன் பிரிவு என சோதனையான காலகட்டத்தை சந்தித்தார். இதனால் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குயின் எலிசபத் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகனாக நரேன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக அச்சுவின்டே அம்மா, ஒரே கடல், மின்னாமினி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம், மிகப்பெரிய ஹிட்டான ஜோசப் அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.