குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி |

பாலிவுட் நடிகை அகான்ஷா சிங். பத்ரிநாத் கி துல்ஹனியா, மேத்தி கே லடூ, குயட் படங்களில் நடித்தார். தற்போது ரன்வே 34 படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார். தமிழில் ஆதி ஜோடியாக 'கிளாப்' படத்திலும், ஜெய் ஜோடியாக 'வீரபாண்டிபுரம்' படத்திலும் நடித்தார்.
தற்போது புதுமுகம் ரூபேஷ் குமார் சவுத்ரி என்பவர் ஜோடியாக 'சஷ்டிபூர்த்தி' என்ற படத்தில் நடிக்கிறார். இவரே இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. பவன் பிரபா என்பவர் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ரம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா, அக்ஷயுத் குமார், ஒய்.விஜயா, சுபலேகா சுதாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் பவன் பிரபா கூறியதாவது: சஷ்டி பூர்த்தி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். நாயகனும், நாயகியும் நாயகனுடைய பெற்றோரின் 60ம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணுகிறார்கள். நாயகனுடைய பெற்றோராக ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா நடிக்கிறார்கள். அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதைதான் சஷ்டி பூர்த்தி. சென்டிமென்ட் மற்றும் பொழுதுபோக்கு கலந்து வலம் வரும். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். வருகிற ஜூலை மாதமே படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். என்றார்.




