'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐசுஜான்சி. அவர் தற்போது நாவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்ஷன் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தர்ராஜன் நாயகன், நாயகிகளாக நடிக்கிறார்கள். ரகுநாத் இசை அமைக்கிறார், வசந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி ஐசுஜான்சி கூறியதாவது: நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம். என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். என்றார்.