நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மார்ச் மாத கடைசி வாரத்தில் இரண்டு முக்கிய படங்களான சிலம்பரசன் நடித்த 'பத்து தல', சூரி, விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' ஆகிய படங்கள் வெளிவந்தன. மார்ச் 30ம் தேதி வெளிவந்த 'பத்து தல' படம் முதல் நாளில் சுமார் 12 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியாகின. மார்ச் 31ம் தேதி வெளியான 'விடுதலை' படம் முதல் நாளில் சுமார் 8 கோடி வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.
'விடுதலை' படத்திற்கான விமர்சனங்களும், வரவேற்பும் அதிகமாக இருந்ததால் அது 'பத்து தல' படத்தின் வரவேற்பையும், வசூலையும் குறைக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். சில ஊர்களில் 'பத்து தல' படத்தின் காட்சிகளைக் குறைத்துவிட்டு 'விடுதலை' படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் 'விடுதலை' படத்தில் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். சூரி கதாநாயகனாக நடித்த முதல் படம் முன்னணி கதாநாயகனாக சிம்பு நடித்த படத்துடன் போட்டி போட்டு முன்னேறி வருவது திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
படத்தின் கதைதான் எப்போதுமே 'கிங்' என்பதை 'விடுதலை' படம் மீண்டும் புரிய வைத்துள்ளது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.