Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் இளையராஜா - கமல் வாழ்த்து | இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து | ஜுன் 1, 2022ல் டிரைலர் வெளியீடு : ஜுன் 1, 2023ல் பட வெளியீட்டு அறிவிப்பு | ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு

30 மார், 2023 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Kuravar-community-not-allowed-to-watch-Pathuthala-movie-issue-:-clarification-from-Theatre-side

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் பத்து தல . இந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. தீண்டாமையை கடைபிடித்ததாக சர்ச்சை உருவானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. தியேட்டர் நிர்வாகத்தையும், அந்த ஊழியரையும் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் பரவிய வீடியோவை தொடர்ந்து அவர்களை ஏன் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறித்து குறிப்பிட்ட திரையரங்கம் இப்போது விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் கூறும்போது, பத்து தல படம் "யு/ஏ" சான்றிதழ் கொண்ட திரைப்படமாகும். 12 வயது குறைவான சிறுவர்கள் இந்த படத்தை காண அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுடன் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால், சிறுவர்களை ஊழியர் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படுவதால், பின்னர் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை வெளியாகும் விடுதலை படத்திற்கு "ஏ" சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த படத்திற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு
ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதி மறுத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட, அலமாதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி காவேரி,20 கொடுத்த புகாரின் அடிப்படையில், ரோகிணி தியேட்டர் பணியாளர்களான கோயம்பேட்டை சேர்ந்த ராமலிங்கம்,50 மற்றும் வேலுாரைச் சேர்ந்த குமரேசன்,36 ஆகியோர் மீது இரு பிரிவுகளில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன்ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி ... எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

31 மார், 2023 - 10:44 Report Abuse
A.Tamilselvan புருஷோத்தமன்...U/A சான்றிதழ் படத்திற்கு பெரியர்களோடு குழந்தைகள் அனுமதிக்கலாம்.. அந்தம்மாவை தியேட்டர் ஊழியர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல்.. கையால் சைகை செய்வதை நீங்கள் பார்க்கவே இல்லையா..ஜாதி வெறி ஊறி போய் இருக்கும் போலயே.. பெயரில் உள்ள உத்தமனை தூக்கி விடுங்கள்
Rate this:
seshadri - chennai,இந்தியா
31 மார், 2023 - 10:15 Report Abuse
seshadri டிக்கெட் எப்படி கொடுத்தார்கள் கொடுத்துவிட்டு அனுமதி மறுப்பு என்பது மிகவும் தவறான செயல். எல்லோரும் மனிதர்கள்தான். இன்று அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் யார் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
31 மார், 2023 - 07:00 Report Abuse
 N.Purushothaman தியேட்டர் நிர்வாகத்தின் பதில் சரியாகத்தான் இருக்கு ...சிறார்களை ஏ படத்திற்கு அனுமதிக்கலாம்ன்னு அரசு சொல்ல வருகிறதா ? தீவிர விசாரணையின்றி உடனே ஏன் வழக்கு பதிய வேண்டும் ..?
Rate this:
KayD - Mississauga,கனடா
30 மார், 2023 - 17:03 Report Abuse
KayD ஐ .. நீ விடுதலை A certificate படத்துக்கு நீ எந்த ஏஜ் அனுமதி தருவ என்று நாங்க எங்க பாக்க போறோம் ங்கிற தைரியம் தானே ... துட்டு சாணி ல கிடந்தா கூட தொடைச்சு use பண்ணுவே ஆனா சாதி ,சனம் என்று வரும் பொது ரூல்ஸ் ஆ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in