இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரோஜா தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவில் வைத்து காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. இதனையடுத்து அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ, அதற்கு பிரியங்கா தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த நினைத்தோம். அப்பா அம்மாவிற்கு விசா கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் வர முடியவில்லை. இது திட்டமிட்ட திருமணம் தான், ரகசிய திருமணம் இல்லை. சில வருத்தங்கள் இருக்கிறது. ஆனாலும், சீக்கிரமே அவர்கள் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். இது சீக்ரெட் மேரேஜ் இல்லை ஹேப்பி மேரேஜ் தான்' என அதில் பேசியுள்ளார்.