ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகு, சிப்பிக்குள் முத்து ஆகிய தொடர்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமானார் சின்னத்திரை நடிகை ரிஹானா. தற்போது ஆனந்தராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரத்தின் போது அர்னவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து அர்னவின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் ரிஹானாவை தரக்குறைவாக பேசி தொந்தரவு செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பாதையில் தைரியமாக பயணித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து தனக்கு சோஷியல் மீடியாவில் நடந்த மோசமான நிகழ்வை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.
'சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு வலை வீசும் சிலர் செண்டிமெண்ட்டாக பேசி மயக்குவார்கள், சிலர் பணத்தை காட்டி மயக்குவார்கள். அப்படி ஒருநபர் எனது நிர்வாண வீடியோவை அனுப்ப சொல்லியும், அந்தரங்க பாகங்களை காட்ட சொல்லியும், கேவலமான செயல்களை செய்து அதை வீடியோவாக அனுப்ப சொல்லியும் கேட்டார். அதற்கு 15 லட்சம் பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் யார் என்று தெரிந்துகொள்ளவும், சிக்க வைக்கும் பொருட்டும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அவர் சிக்கவில்லை'. எனவே, பெண்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ரிஹானா அட்வைஸ் செய்துள்ளார்.