என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரோஜா தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவில் வைத்து காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. இதனையடுத்து அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ, அதற்கு பிரியங்கா தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த நினைத்தோம். அப்பா அம்மாவிற்கு விசா கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் வர முடியவில்லை. இது திட்டமிட்ட திருமணம் தான், ரகசிய திருமணம் இல்லை. சில வருத்தங்கள் இருக்கிறது. ஆனாலும், சீக்கிரமே அவர்கள் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். இது சீக்ரெட் மேரேஜ் இல்லை ஹேப்பி மேரேஜ் தான்' என அதில் பேசியுள்ளார்.