என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

நடிகை மீனாட்சி ஷேஷாத்ரி, நடிகர்கள் ராகுல் ராய் மற்றும் தீபக் திஜோரி ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை பேர்ல் குழும நிறுவனங்களின் ரோனி ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
மீனாட்சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது எனது அதிர்ஷ்டம், இருப்பினும் ரோனி ரோட்ரிகஸின் இந்த நல்ல முயற்சி, இங்கு வந்தது எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
தீபக் திஜோரி கூறுகையில், ‛‛ரோனி ரோட்ரிக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாகப் பார்க்கிறார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் தொடர்ந்து பணியாற்றுகிறார்.  நான் நடிக்க ஆரம்பித்தபோது மீனாட்சி சேஷாத்ரியுடன் ஒரு படம் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். ராகுல் ராய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நான் மீனாட்சியின் அருகில் அமர்ந்தேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்'' என்றார்.
 
           
             
           
             
           
             
           
            