விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகை மீனாட்சி ஷேஷாத்ரி, நடிகர்கள் ராகுல் ராய் மற்றும் தீபக் திஜோரி ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை பேர்ல் குழும நிறுவனங்களின் ரோனி ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
மீனாட்சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது எனது அதிர்ஷ்டம், இருப்பினும் ரோனி ரோட்ரிகஸின் இந்த நல்ல முயற்சி, இங்கு வந்தது எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
தீபக் திஜோரி கூறுகையில், ‛‛ரோனி ரோட்ரிக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாகப் பார்க்கிறார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் தொடர்ந்து பணியாற்றுகிறார். நான் நடிக்க ஆரம்பித்தபோது மீனாட்சி சேஷாத்ரியுடன் ஒரு படம் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். ராகுல் ராய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நான் மீனாட்சியின் அருகில் அமர்ந்தேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்'' என்றார்.