மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் | சினிமாவில் பட்ட அவமானம் : மனம் திறக்கும் மூசா அபிலாஷ் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை படக்குழுவினர் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் தவிர படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என படம் சம்பந்தப்பட்ட யாருமே அது குறித்து சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை.
ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி, தங்களது டுவிட்டரில், ஆர்ஆர்ஆர் படம் இதுவரை வாங்கிய ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளையும் குறிப்பிட்டு ஒரு போஸ்டராக வெளியிட்டுள்ளனர். மேலும், ‛‛ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் உலகில் எங்காவது திரையரங்குகளில் ஹவுஸ்புல்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா விருதுகளையும் விட இந்த உணர்வு பெரியது. நீங்கள் பொழிந்த அன்பிற்கு நாங்கள் நன்றி சொல்ல முடியாது'' என தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பெற்றது. ஆஸ்கர் விருது வாங்கிய சமயத்தில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட ராஜமவுலி உள்ளிட்டோர் இப்போது எதுவும் போடாதது ஆச்சரியமாக உள்ளது. எல்லோரும் அவர்களது அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள்.