'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதுதவிர அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.