கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் | 'பராசக்தி'யை ஓடிடி வெளியீட்டை தடுக்க கோர்ட் மறுப்பு | எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதுதவிர அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.




