மீண்டும் தனுஷ் உடன் படம்: உறுதிப்படுத்திய வெற்றிமாறன் | ‛தனி ஒருவன் 2' எப்போது வரும்?: இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! | நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் |
சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதனால் இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் கே.பாக்யராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் பார்த்திபன், நாசர், பிரசன்னனா, நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் படம் பற்றி பேசியதாவது : இந்த படம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு அரசியலை பேசும் படம். கொடூரமான வெயிலில் கருவேலங்காட்டிலேயே படமாக்கினோம். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. சாந்தனு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமானதான இருக்கும்.
நன்றாக நடிக்க தெரிந்த நடிகை வேண்டும் என்பற்காக ஆனந்தியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட அதிகமானது. அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இராவணன் என்ற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறது என்றார்கள். அதை தாண்டி இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. என்றார்.