ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதனால் இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் கே.பாக்யராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் பார்த்திபன், நாசர், பிரசன்னனா, நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் படம் பற்றி பேசியதாவது : இந்த படம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு அரசியலை பேசும் படம். கொடூரமான வெயிலில் கருவேலங்காட்டிலேயே படமாக்கினோம். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. சாந்தனு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமானதான இருக்கும்.
நன்றாக நடிக்க தெரிந்த நடிகை வேண்டும் என்பற்காக ஆனந்தியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட அதிகமானது. அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இராவணன் என்ற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறது என்றார்கள். அதை தாண்டி இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. என்றார்.