ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி |
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா. அவரது படங்களைப் பற்றி பலரும் கிண்டலடித்து விமர்சனம் செய்வார்கள். ஆனால், பாலகிருஷ்ணா நிஜத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு உதவிகளை இலவசமாக வழங்கி வருபவர் என்பது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
அவர் சேர்மன் ஆக இருக்கும் பசவதாரகம் மருத்துவமனையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். அடுத்து இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அவரது அண்ணன் மகன் தாரகரத்னா இதய நோயால் பாதிக்கப்பட்டு 40 வயதிலேயே மரணமடைந்தார். “இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அனைத்து அறுவை சிகிச்சையும் இலவசம்,” என பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள பசவதாரகம் மருத்துவமனை மற்றும் இந்துப்பூரில் பாலகிருஷ்ணா கட்டியுள்ள மருத்துவமனையில் இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும், இந்துப்பூரில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் ஒரு பிளாக்கிற்கு தாரகரத்னா பெயரையும் வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க உள்ளதாகவும், நோயால் பாதிக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்காக இலவச மருந்துகள் மற்றும் இலவச சாப்பாடுகள் வழங்கப்படும் என்றும் பாலகிருஷ்ணா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.