மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
அடுத்து இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்து தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய போஸ்டருன், இத்தாலி மொழியில், “சர்வதேச ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவது அத்திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.