பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
அடுத்து இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்து தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய போஸ்டருன், இத்தாலி மொழியில், “சர்வதேச ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவது அத்திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.