'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
அடுத்து இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்து தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய போஸ்டருன், இத்தாலி மொழியில், “சர்வதேச ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவது அத்திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.