மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் | ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி | மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா? | உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் |
தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திர ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. கடந்த சில பதிவுகளாக தங்களது குழந்தையுடன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் அவர் போடும் பதிவுகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
நேற்று இரவு, குழந்தைகளின் கைகளை பாசத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நமது அன்புக்குரியவர்களுடன் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு, அனைத்தையும் பற்றியது…. நீங்கள் வைத்திருக்கக் கூடிய அன்பு….” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு பறி போனது பற்றி விக்னேஷ் சிவன் சிறிதும் கவலைப்படவில்லை. தனது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை அது கொடுத்துள்ளது என்று ஒரு வாரம் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.