‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திர ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. கடந்த சில பதிவுகளாக தங்களது குழந்தையுடன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் அவர் போடும் பதிவுகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
நேற்று இரவு, குழந்தைகளின் கைகளை பாசத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நமது அன்புக்குரியவர்களுடன் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு, அனைத்தையும் பற்றியது…. நீங்கள் வைத்திருக்கக் கூடிய அன்பு….” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு பறி போனது பற்றி விக்னேஷ் சிவன் சிறிதும் கவலைப்படவில்லை. தனது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை அது கொடுத்துள்ளது என்று ஒரு வாரம் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.




