ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தின் ஹீரோ தனுஷா? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி |

தமிழ் சினிமாவில் புராண காலத்து ராமன் கதாபாத்திரம் எப்போதுமே திரைப்படங்களில் ஹீரோவாக காட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் ராவணன் கதாபாத்திரம் வில்லன் தான் என்றாலும் அதையும் நம் தமிழ் படங்களில் ஹீரோயிசம் கலந்து நல்லவனாகவே காட்டி வருகிறார்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் என்கிற டைட்டிலிலேயே ஒரு படம் வெளியானது. கதையம்சமும் கிட்டத்தட்ட நவீன கால ராவணனை பற்றியதுதான்.
அதன்பிறகு தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்கிற படத்தின் டைட்டிலை பார்க்கும் போது இதுவும் ராவணனின் அம்சமாக உருவாகியுள்ள படம் என்பது தெளிவாக தெரிகிறது. அதிலும் சிம்புவின் கேங்ஸ்டர் கதாபாத்திரம் ராவணனின் குணாதிசயங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகவே சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 18) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
அதேபோல மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தற்போது சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள ராவணக்கோட்டம் என்கிற படத்தை இயற்றியுள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலிலேயே ராவணன் இடம் பெற்றுள்ளார். படத்தின் கதையம்சத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் நிச்சயமாக ராவணனின் குணாதிசயங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவும் இன்று (மார்ச் 18) மாலை துபாயில் நடைபெறுகிறது. இப்படி ராவணனின் அம்சங்களைக் கொண்டு ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழா ஒரே நாளில் நடப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.




