நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
மிஸ் தமிழ்நாடு, மிஸ்சஸ் தமிழ்நாடு, சவுத் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் ப்ரவீன், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், வெளிநாடு வாழ் பெண் ஒருவரிடம் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் முருகதாஸ் சேர்ந்து 15 லட்சம் வரை சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கேட்டபோது அந்த பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஜோ மைக்கேல் ப்ரவீனை அனுகி ஆதாரத்தை கொடுத்து உதவி கேட்டுள்ளார். அவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விரிவாக எழுதி, பாலாஜி முருகதாஸ் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டும் ஆடியோவையும் ரிலீஸ் செய்துள்ளார். தவிரவும் சட்ட ரீதியான உதவியை அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் முதலில் தைரியமாக புகார் அளித்த அந்த பெண் தற்போது பின்வாங்குவதாகவும், அவரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளதாகவும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த குற்றச்சாட்டானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.